சோதனை ஓட்ட இரயிலால் 2 வர் பலி!

சோதனை ஓட்ட இரயிலால் 2 வர் பலி!

எம்.ரபிக் ராஜா,

நேற்று வியாழக்கிழமை பெரியகுளம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் காணவில்லை என்ற செய்தி வெளியான நிலையில்,  மாலை அவரது பிரேதம் ரயில் தண்டவாளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

 அவரது பெயர் ராஜா, பாரஸ்ட் ரோடு, வடகரை, பெரியகுளம் தங்கமுத்து பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

  விசாரித்த போது மதுரையில் இருந்து போடி நோக்கி சோதனை ஓட்டமாக இரயில் வந்த போது எதிர்பாராத விதமாக அதில் சிக்கி ராஜா இறந்துள்ளார்.

  அதே போல் அந்த சோதனை ஓட்ட இரயிலி சிக்கி  லட்சுமி என்ற பெண் பலியானார்.

   தேனிக்கு சோதனை ஓட்டமாக வந்த இரயில் மோதி இருவர் பலியான சம்பவம் தேனி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன் அறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டம் காரணமாக இரண்டு உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டது.