இன்ஸ்டாகிராமால் கணவனை இழந்த இளம் பெண்! காட்பாடி மகளிர் காவல் நிலையத்தார் அலைகழிப்பு!!

கு.அசோக்,
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு ஒரு குடும்பத்தை பரிதவிக்க வைத்திருக்கிறது.
ஆகவே கைக்குழந்தையுடன் மனைவியை விட்டுச் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் இளம் பெண் தர்ணா செய்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னை அடுத்த கீரைசாத்து காலனி பகுதியை சேர்ந்தவர் தீபிகா 22. இவருக்கு சீமோன் என்வபருடன் கடந்த 4 வருடங்களுக்கு முன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சீமோன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தீபிகாவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் போய் விட்டார்.
இது குறித்து தீபிகா கடந்த டிசம்பர் மாதம் பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது சீமோனை அழைத்து வந்து சமாதானம் செய்து இருவரையும் சேர்த்து வைத்து அனுப்பினர்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் சீமோன் தீபிகாவை விட்டுவிட்டு மறுபடியும் அந்த பெண்ணுடன் சென்று விட்டதாக கூறி பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீபிகா சென்றுள்ளார் .
அப்போது போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
ஆகவே தீபிகா காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் தீபிகாவை பொன்னை காவல் நிலையத்துக்குச் சென்று புகார் மனு அளிக்குமாறு கூறி காட்பாடி அனைத்து மகளிர் காவல்ர்கள் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் தீபிகா கைக்கு குழந்தையுடன் நேற்று மாலை 4 மணி அளவில் பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் உன்னுடைய புகாரை நாங்கள் ஏற்க முடியாது எனவும் மேலும் அனைத்து மகளிர் காவலர்கள் மூலம் இப்பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறி திருப்பி அனுப்பி அலைக்கழித்துள்ளனர்.
இது குறித்து புகார் தாரரான தீபிகா கூறுகையில், எனது காதல் கணவனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. என்னை என்னுடைய கணவர் அம்போ என்று கைக்குழந்தையுடன் விட்டு விட்டு சென்று விட்டார்.
இது தொடர்பாக புகார் அளிக்க முயன்ற போது பொன்னை காவல் நிலையத்துக்கும், காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் மாறி மாறி அனுப்பி அலை கழிக்கிறார்கள்.
நான் காலை முதல் மாலை வரை அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன். இது குறித்து மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்.இந்நிலையில் தீபிகா உன்னை காவல் நிலையத்தில் தர்மாவில் ஈடுபட்டார். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.