ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரிக்கு பட்டாக்கத்தி வெட்டு!

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரிக்கு பட்டாக்கத்தி வெட்டு!

கு.அசோக்,
 நாட்றம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவருக்கு சராமாறி கத்திவெட்டு! மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!போலீசார் வலைவீச்சு!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் இரயில்வே நிலையம்  பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் முருகேசன்.

 இவர் கோளாறு பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தில் பணியாற்றி வந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு  ஓய்வு பெற்றவர்.

இந்த நிலையில்  தன்னுடைய வீட்டிலிருந்து இருச்சக்கர வாகனத்தில் பச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம  நபர்கள் இருட்டான இடத்தில்  முருகேசனை மடக்கி சரமாரியாக பொட்டாக்கத்தியால் வெட்டினர்.

இதனால் வலி தாங்க முடியாமல் முருகேசன் சத்தம் போட்டார். அவரதுஅலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் கத்தியை அங்கே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகேசனை மீட்டு அக்கம் பக்கத்தினர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்  மேலும் முருகேசனை வெட்டியவர் யார்? எந்த பகுதியை சார்ந்தவர்கள்? எதற்காக வெட்டினர்கள் எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.