எப்படி கிடைத்தது குழந்தை? பொய் சான்று வாங்க முயன்றவர்கள் கைது!

ஜி.கேசேகரன்,
மர்மமாக கிடைக்கப் பெற்ற குழந்தைக்கு போலி பிறப்புச் சான்றிதழ் வாங்க முற்பட்டவரை பதிவாளர் போலீசில் பிடித்துக் கொடுத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார் பட்டைப் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணன் மகன் சந்திரகாந்தன் (43).
இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவாளரிடம் சென்றுள்ளார்.
அப்போது தனது ஒன்றரை வயது பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் சில பிள்ளைகள் உள்ளது, எனவே அதனை சரி செய்ய வேண்டுமென கேட்டிருக்கிறார்.
பார்க்க சாட்டர்டே சரிபார்த்த பதிவாளர் பாரி இந்த குழந்தையின் பிறப்பு குறித்து பதிவேடுகள் தவறாக உள்ளது எனவும் மேலும் இந்த பிறப்புச் சான்றிதழ் போலியானது எனவும் கண்டறிந்துள்ளார்.
இது குறித்து சந்திரகாந்தனிடம் கேட்டவுடன், பதட்டமான சந்திரசேகரன் உடனடியாக தனது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு அங்கிருந்து மடமடவென சென்றுள்ளார்.
இதனல் சந்தேகம் அடைந்த பதிவாளர் பாரி இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசாரிடம் புகார் அளித்தார்.
அப்போது சந்திரகாந்தனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில் சந்திரகாந்தனுக்கு 20 வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தால் தனக்கு குழந்தை வேண்டுமென அவருடைய நண்பர்கள் ஆன மதியழகன், இளங்கோ, ரமேஷ், மூவரிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மூவரின் ஏற்பாட்டில் ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த ஏதோ ஒரு குழந்தையை அரசுக்கு தெரியாமல் சந்திரகாந்தனிடம் கொடுத்துள்ளனர்.
சந்திரகாந்தனும் அந்த குழந்தை முறையாக தத்து எடுக்கவில்லை. தொடர்ந்து அதற்கான பிறப்புச் சான்றிதழையும் போலியாக தயார் செய்துள்ளார் என தெரிய வந்தது.
இந்த நிலையில் பிறப்புச் சான்றிதழில் பெயரை பிழை திருத்தம் செய்ய பதிவாளரை அணுகிய போது வசமாக சிக்கிக் கொண்டார்.
இது குறித்து போலீசார் கைதான நான்கு பேரிடம் பெண் குழந்தை யாரிடம் வாங்கப்பட்டது? இதற்கு உடனடியாக செயல்பட்டவர் யார்?குழந்தையின் பெற்றோர்கள் யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது