தெளிவாக காய்ச்சப்பட்ட கள்ளச்சாராயம்! போலீசார் பிடித்து அழித்தனர்!

தெளிவாக காய்ச்சப்பட்ட கள்ளச்சாராயம்! போலீசார் பிடித்து அழித்தனர்!


ஜி.கே.சேகரன்,
  
பல்வேறு மலைப்பகுதிகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு  900 லிட்டர் கள்ளச் சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர்.

 வேலூர் மாவட்ட மலைபகுதிகளில்  கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க காவல்துறையினர் சோதனை செய்தனர்.

 அப்போது மேல்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகில் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 அதில்,குடியாத்தம் பகுதியை சேர்ந்த பழனி,பூவரசன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இதே போல் தார்வழி மலை பகுதியில் 210 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டது.

மேலும் பேர்ணாம்பட்டு, சாத்கர் மற்றும் எலந்தமரத்து ஏரி ஆகிய பகுதிகளில் 500 லிட்டர் கள்ளசாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது.
 
அதேபோல் வல்லம்ல பகுதியிலும் 60 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் சாராயம் காய்ச்சியவர்கள் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ஆக மொத்தம் 900 லிட்டர் சாராயம் மற்றும் ஊரல்கள் கைப்பற்றப்பட்டு காவல்துறையினர் அழித்தனர்.