வாணியம்பாடியில் வெடித்தது விபத்தா? சதியா?

வாணியம்பாடியில் வெடித்தது விபத்தா? சதியா?

  ஜி.கே.சேகரன்

 வாணியம்பாடி அருகே பாய்லர் வெடித்து ஒருவர் படுகாயம். ஒரு மாடு பலி5 வீடுகளில் ஆங்காங்கே சேதம்2 டன் எடைகொண்ட பாய்லர்  சுமார் 1 கிலோ மீட்டர்  பறந்து சென்று தொலைவில்  விழுந்தது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்துள்ள சின்ன குரும்பத்தெரு  பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தன்னுடைய  4 ஏக்கர் விவசாய நிலத்தில் மஞ்சம் புல் விவசாயம் செய்து அந்த மஞ்சம் புல்லில் இருந்து மூலிகை எண்ணெய் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

 இதற்காக அவருடைய விவசாய நிலத்திலேயே சுமார் இரண்டு டன் எடையுள்ள பாய்லர் அமைத்து அதன் மூலமாக மூலிகை எண்ணெய் தயார் செய்து வந்துள்ளார்.வழக்கம்போல் இன்று அவருடைய விவசாய நிலத்தில் பாய்லரில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெப்பம் அதிகமாகி பூமியில் புதைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு டன் எடைகொண்ட பாய்லர் வெடித்து சிதறி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலத்தில் விழுந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

   பாய்லரில் பொருத்தப்பட்டிருந்த மீட்டர் மற்றும் இரும்பு துண்டுகள் வெடித்து சிதறி அருகாமையில் உள்ள வீடுகளில் விழுந்து சுமார் 5க்கும் மேற்பட்ட வீடுகளில் விழுந்து ஆங்காங்கே சேதம்  ஏற்பட்டுள்ளது.

 இந்த்ர விபத்தின் போது மூலிகை எண்ணெய் எடுக்கும் பணியில் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். பாய்லர் அருகில்  பணியில் இருந்த அதே பகுதியை சேர்ந்த முனிசாமி என்பவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது உடனடியாக அங்கு இருந்தவர்கள் முனிசாமியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கெண்டன.ர்.

  இந்நிலையில் ஏற்கனவே குகன் என்பவர் வீட்டில், வெடித்த வெடிகுண்டையே பட்டாசு என்று கிராமிய காவல் நிலையத்தார் புரடா விட்டுக் கொண்டிருக்க, தற்போது நடந்த வெடி சம்பவமானது உண்மையிலேயே விபத்தா அல்லது சதியா என்பதை கிளியர் செய்ய வேண்டுமென பொதுமக்கள் வினா எழுப்புகிறார்கள்.