கம்யூனிஸ் கம்யூனிஸ்ட்கள் சாலைமறியல் செய்ய முயற்சி!

கம்யூனிஸ் கம்யூனிஸ்ட்கள் சாலைமறியல் செய்ய முயற்சி!

 கு.அசோக்,

விலைவாசி உயர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும் இளைஞர்களுக்கு வேலையின்மைக்கு எதிராகவும் இதற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சங்கர் மேஸ்திரி தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன போராட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராக சாலையில் நின்று பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  பாஜக மோடி அரசு வெளியேற வேண்டும் என கூறியும் விலைவாசி மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்..

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய திடீர் மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  ஆர்பாட்டத்துக்கு போலிசாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, அத்துமீறி சாலைமறியல் செய்ய முயற்சிப்பதை அதிகாரிகள் சங்கடமாக பார்க்கின்றனர்.