ஓசியில் ஆட்டுகறி கொடுக்காததால் வெட்டியான் டென்ஷன்! பிணத்தை தோண்டி கடை முன் வீசிவிட்டு ஓடினான்!

ஓசியில் ஆட்டுகறி கொடுக்காததால் வெட்டியான் டென்ஷன்! பிணத்தை தோண்டி கடை முன் வீசிவிட்டு ஓடினான்!

எம்.ஏ.கண்ணன்,

  வெட்டியானுக்கு ஓசியில் கறித்தர மறுத்ததால் மயானத்தில் புதைக்கப்பட்ட பெண் சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டு சென்று தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 தேனி மாவட்டம், தேனி அருகே பழனிச்சட்டிப்பட்டியில் கறிக்கடை வைத்து நடத்தி வருபவர் மணியரசன். இவரது கரிகடைக்கு குமார் என்பவர் அடிக்கடி வந்து கறி வாங்கி சென்று வருவது வழக்கம் .

 சுடுகாட்டில் பணி புரியும் குமார் என்பவருக்கு மணியரசன் இலவசமாக கறி கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் நேற்று காலை குமார் கறிக்கடைக்கு வந்து மணியரசன் மிரட்டி இலவசமாக கறி கேட்டுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் இலவசமாக கறி கொடுப்பதற்கு மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

   பின்னர் அங்கிருந்து கோபமாகச் சென்ற குமார் சிறிது நேரம் கழித்து சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பெண் சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடை முன்பு போடப்பட்ட சடலம் யாருடையது, எங்கிருந்து எடுத்துவரப்பட்டது, என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் சடலத்தை அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி சென்றனர் .

  ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறிக்கடைகளில் அதிக மக்கள் கூட்டம் கூடும் நேரத்தில் சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.