காட்பாடியில் போதை ஊசி பயன்படுத்திய இருவர் கைது! செங்கல்பட்டை போலவே மெகா சோதனை தொடருமாம்?!

காட்பாடியில் போதை ஊசி பயன்படுத்திய இருவர் கைது! செங்கல்பட்டை போலவே மெகா சோதனை தொடருமாம்?!

 உ.சசிகுமார்,

 வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் போதை ஊசி பயன்படுத்திய இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

 இரண்டு தினங்களுக்கு முன்னர் செங்கல்பட்டு மாவட்டம்,பொத்தேரி, தனியார் பல்கலை மாணவர்கள் தங்கும் பகுதிகளில் 1000 போலீசார் திடீர் ரைடு நடத்தினர்.

 சுமார் 500-க்கும் மேற்பட்ட விடுதிகளில் சோதனையிட்டதில், மாணவர்களிடமிருந்து வகை வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

 அதன் தொடர்பாக கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்கிற ரவுடி உட்பட சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் செல்வமணி ஏற்கனவே காவல் துறை பதிவேட்டில் சரித்திர குற்றவாளியாக இடம் பெற்றவராவார்.

https://livelook.in/1000-police-gathered-in-front-of-the-private-university-Seizure-of-various-drugs

 மேற்படி இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தமிழகமெங்கும் உள்ள தனியார் பல்கலைகழக மாணவர்கள் தங்கும் குடியிருப்புகளில் ரைடு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 அப்படியிருக்க, வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவள்ளுவர் நகர், சின்ன பள்ளி குப்பம் ரோடு பகுதியில் போதை ஊசி பயன்படுத்தியதாக இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

 அவர்களிடமிருந்து போதை ஊசி தயாரிக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகள்,சோடியம் குளோரைடு ஐ.பி, கண்ணாடி பவூல் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 இந்தப் பகுதியில் பலவிதமான போதைப்பொருட்கள் அதிக அளவு புழங்குகிறது என்று கூறப்படும் நிலையில் மேற்படி இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 மேலும் காட்பாடி பகுதியில் பக்காவாக சோதனை நடத்தி போதை வஸ்துகள் புழக்கத்தை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 நல்லது நடந்தால் மகிழ்ச்சி.