தனியார் பல்கலை முன் குவிந்த 1,000 போலீசார்! பலவிதமான போதைப் பொருள்கள் பறிமுதல்!!

ம.பா.கெஜராஜ்,
தமிழகத்தில் பெரிய கல்வி நிறுவனங்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலவற்றில் போதைப்பொருட்கள் மாணவ மாணவிகள் மத்தியில் சர்வசாதாரணமாக புழங்குகிறது.
பொத்தேரி எஸ்ஆர்எம் கல்லூரி அருகே தாம்பரம் நகர போலீசார் மாணவர்களின் குடியிருப்புகளில் சோதனை நடத்தி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையில் சுமார் 1000 போலிசார் ஈடுபட்டனர்.
இன்று சனிக்கிழமை காலை 6 மணி முதல் 500-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த சோதனை நடத்தப்பட்டன. அதில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 19 மாணவர்களிடமிருந்து கடத்தல் பொருள்கள் மீட்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்களை பிடித்து மண்டபத்தில் வைத்திருந்தனர்.
எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ரகசிய தகவலின் பேரில், தாம்பரம் நகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக், அந்த இடத்தில் சிறப்புச் சோதனை நடத்துமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
VIDEO | Chennai Police conducts raids at several hostels in Potheri area where students of various private colleges stay. The raids are being conducted following reports of sale of cannabis (ganja) in these hostels.#ChennaiNews
— Press Trust of India (@PTI_News) August 31, 2024
(Full video available on PTI Videos -… pic.twitter.com/n05wehW1iH
அதன் பேரில் தாம்பரம் கூடுதல் காவல் ஆணையர் சி.மகேஸ்வரி மேற்பார்வையில், பொத்தேரி அபோட் பள்ளத்தாக்கில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரிக்கு அருகே இந்த ரைடை நடத்தினர்.
இந்த குழுவில் தாம்பரம், பள்ளிக்கரணை மற்றும் போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர்கள், ஆயுத ரிசர்வ் போலீஸ் மற்றும் மகளிர் போலீஸ் குழுக்கள் உட்பட 1,000 போலீசார்/பணியாளர்கள்லிடம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
மாணவர்களிடம் இருந்து கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா எண்ணெய், புகை பிடிக்கும் பானை, ஹூக்கா மெஷின், ஷிஷா (ஹூக்கா பவுடர்) ஆகியவை கைப்பற்றப்பட்டதாக போலீசார் சொல்கிறார்கள்.
அபோட் பள்ளத்தாக்கு அருகே கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஜி.செல்வமணி (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஏ+ பிரிவு ரவுடியான இவர் 2 கிலோ கஞ்சா மற்றும் கத்தியை வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.