செம்மரக்கட்டை கடத்தல்காரரிடமிருந்து ஜிபேவில் பணம் பெற்ற எஸ்.ஐ.சஸ்பெண்டு!உண்மையில் நடந்தது என்ன?

ம.பா.கெஜராஜ்,
செம்மரக் கட்டை கடத்தல்காரரிடமிருந்து ஜிபே மூலமாக ரூ.10,000/- பெற்ற உதவி ஆய்வாளர் கார்த்திகேயனை எஸ்.பி.பிரபாகரன் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்தார்.
வேலூர் எல்லையருகே, திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் காவல் நிலையம் உள்ளது. அங்கு உதவி
ஆய்வாளராக கார்த்திகேயன் என்பவர் பணியாற்றி வருகின்றார்.
இவர் மீது பல்வேறு புகார்கள் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக செம்மரக்கட்டை கடத்தல்காரரிடம் ரூ.10,000/- லஞ்சம் பெற்றதாகவும். அவரது ஜிபே-வே அதற்கு ஆதாரம் என்று அதன் ஸ்கிரீன்ஷாட் உள்ளிட்டவைகளை புகாருடன் அளித்திருக்கிறார்கள்.
அதே போல் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளன.
இதன் பேரில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயனை பற்றி ரகசிய விசாரணை மேற்கொள்ள தனி டீம் அமைத்தாராம் எஸ்.பி.
அதில் அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உறுதியானதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்கிறார்கள் போலீசார்.
இது குறித்து விசாரித்த போது, கலசபாக்கத்தில் சரவணன் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவருக்கு அறிமுகமான பலரில் குணசேகரன் என்பவரும் ஒருவர். குணசேகரன் மீது ஏற்கனவே செம்மரக்கடத்தல் வழக்கு உள்ளன.
இந்நிலையில் கண்ணமங்கலம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு அவரது உயர் அதிகாரிகள் பத்து பேரிகார்டு வாங்கி கொடுக்க வேண்டியது உன் பொறுப்பு என்று கூறியிருக்கிறார்கள்.
ஆகவே மேற்படி குணசேகரனிடம் இது குறித்து உதவி ஆய்வாளர் உதவி கேட்டதன் பேரில் அவர் கார்த்திகேயனின் ஜிபே அக்கவுண்டில் 10,000 ரூபாவை டிரான்ஸ்பர் செய்திருக்கிறார். பணத்தையும் போட்டுவிட்டு அதன் ஸ்கிரீன் ஷாட்டை அதிகாரத்தில் உள்ளவரிடம் காட்டி புலம்பினாராம்.
மேலும், கண்ணமங்கலம் காவல் எல்லையில் கடத்தும் அளவுக்கு மணல் இல்லையாம். ஆனாலும் கூட அந்தக் குற்றச்சாடுகள் எல்லாம் இவரை சிக்கவைக்க நடந்த ப்ளான் என்கிறார்கள்.
இதே உதவி ஆய்வாளர் கடந்த 2022 ஆம் ஆண்டு வேலூர் காட்பாடி சப்டிவிஷன் எல்லைக்குட்பட்ட மேல்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
அப்போது இவரது டார்ச்சர் தாங்காமல் சரத் என்பவர் ஸ்டேஷன் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று 7 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் இறந்தார்.
இதனால் கார்த்திகேயன் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவானது. ஆனால் அதை மிஸ்டேக் ஆஃப் பேக்ட் என்று போலிசார் வழக்கை முடித்து வைத்து காப்பாற்றினர்.
இருப்பினும் இறந்து போன சரத் தரப்பினர் புரெட்டெஸ்ட் கேஸ் போட்டிருக்கிறார்கள்.
இதில் சரத் பட்டியலினத்தவர் என்கிற நிலையில் எம்.பி.சி பெண்ணை காதலித்துள்ளார். சரத் ஏற்கனவே திருவலம் காவல் நிலையத்தில் வரலாற்று பதிவேட்டில் இருப்பதால் அவரை டிஸ்டர்ப் செய்யச்சொல்லி பெண் வீட்டுத் தரப்பில் ப்ரெஷர் கொடுத்தனராம்.
ஆகவே கார்த்திகேயேன் சரத் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அந்த எஸ். ஐ.க்கு பாடம் புகட்டுகிறேன் என்று சொல்லி இந்த தற்கொலை சம்பவம் நடந்தது என்கிறார்கள்.
இந்த பிரச்சனையால் மேல்பாடி காவல் நிலையத்திலிருந்து கார்த்திகேயன் கண்ணமங்கலம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் அவருக்கு பணியிடை நீக்கம் ஆணை கிடைத்திருக்கிறது.
இது குறித்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயனிடம் தொடர்பு கொண்டு பேசியதில் எல்லாம் பொய் சார் என்கிறார் ஒற்றை வார்த்தையில்.
அது சரி.