போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்ற இருவர் கைது!

க.பாலகுரு,
போலி நகைகளை அடகு வைத்த 2 பேர் நீடாமங்கலம் காவல்துறையினரால் கைது செய்து சிறையிலடைப்பு .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கர்ணாவூர் ஊராட்சி தரிசுவேலி கிராமத்தை சேர்ந்த வீரசேகர் (29) .இவர் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் அடகு கடையில் ஏற்கனவே 6 போலி மோதிரங்கள் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஒரு மோதிரம் அடகு வைக்க வந்துள்ளார். அப்போது அடகு கடை காரருக்கு சந்தேகம் வந்து வீரசேகரை பிடித்து நீடாமங்கலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அங்கு காவல்துறையினர் விசாரித்ததில் நீடாமங்கலம் அருகில் அனுமந்த புரத்தில் உள்ள வினோத் (35) என்பவர்தான் அடகு வைக்க சொன்னார் என்று கூறியுள்ளார். இவர்கள் ஏற்கனவே மேலும் மூன்று கடைகளில் போலி நகைகள் அடகு வைத்தது தெரியவந்தது.
அதன் மதிப்பு ரூ.3 லட்சத்து என கூறப்படுகிறது . இது தொடர்பாக நீடாமங்கலம் தனியார் அடகு கடையை சேர்ந்த சாந்திலால் மேத்தா (47) நீடாமங்கலம் காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில் வினோத் ,வீரசேகரை விசாரித்த இன்ஸ்பெக்டர் சந்தனமேரி , சப் இன்ஸ்பெக்டர் உஷா வழக்கு பதிவு செய்து போலி நகை அடகு வைத்து மோசடி செய்ததாக 2 பேரையும் கைது செய்தனர் . நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.