விவரம் தெரியாமல் பேசிய வேலூர் எம்.பி.!

ஜி.கே.சேகரன்,
இந்தியை திணிக்கவே மத்திய அரசு, நீதிமன்ற சட்டங்களை பெயர்மாற்றம் செய்யவுள்ளனர் வேலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்று வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் பேச்சு
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பார் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டமானது நடந்தது.
இதில் வழக்கறிஞர்கள் ரவிராமன், சுமதி, சிவராஜ் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்று மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் சட்டங்கள் ஆகியவைகளுக்கு பெயர்மாற்றம் என்ற பெயரில் பாரத் என முன்னிலைப்படுத்தி இந்தியில் பெயர் வைப்பதை கண்டித்தும் பெயர்மாற்றம் செய்ய கூடாது என கோரியும் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், குடியாத்தம், ஆம்பூர் வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்று எதிர்ப்பை தெரிவித்தனர்.
¢ இந்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டு இந்தியை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது, அந்த வகையில் மூன்று சட்டங்களையும் பெயர்மாற்றம் செய்ய விரும்புகிறது.
அடிப்படை சட்டங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும் ஆனால் பெயர்மாற்றம் செய்தால் மக்களுக்கு புரியாது மதவாதம் இந்தி ஆதிக்கத்தை நோக்கி மத்திய அரசு செல்கிறது அதற்காக இதனை செய்துள்ளனர் என சம்மதமே இல்லாமல் பேசினார்.
ஏனெனில் இந்திய தண்டனை சட்டம் என்கிற பெயரை மட்டும் மத்திய அரசு மாற்றம் செய்யவில்லை, சட்டங்களில் பலவற்றை மாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் அதைப் பற்றி எந்த விவரமும் அறியதாவராக பேசியதைப் போல் தான் அவரது பேச்சு இருந்தது.