டி.எஸ்.பி. தலைமையில் நடந்த மது விற்பனை!

ஜி.கே.சேகரன்,
பைபாஸ் சாலையில் உள்ள ஒரே இடத்தில் 3 மதுபான கடைகள் செயல்பட்டு வருவதை அகற்ற கோரி மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக, பாமக கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஒரே இடத்தில் 3 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது .பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த கடைகளை அகற்ற கோரி பாமக,பாஜக,அதிமுக உள்ளிட்ட பல கட்சியினர் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதனை அகற்ற கோரி மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட வந்த பாஜக மாவட்ட பொதுசெயலாளர் தண்டபானி,பாட்டாளி மக்கள் கட்சியின் ஆம்பூர் நகர தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பாஜக,பாமக உள்ளிட்ட கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அதன் பின்னர் ஆம்பூர் டி.எஸ். பி சரவணன் தலைமையிலான 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் மதுக்கடை திறக்கப்பட்டு தொடர்ந்து விற்பனை நடைபெற்றது.