லாரியை நெடுஞ்சாலை குறுக்கில் நிற்கவைத்து அலப்பறை!

லாரியை நெடுஞ்சாலை குறுக்கில் நிற்கவைத்து அலப்பறை!

ஜி.கே.சேகரன்,

சரக்கடித்துவிட்டு லாரியை ஒட்டி சென்று தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே  நிறுத்தி அலப்பறை செய்த லாரி ஓட்டுனரால் போக்குவரத்து பாதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, பெருமாள்பேட்டை பகுதியில் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சர் லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலை குறுக்கே நின்றது. சாலையின் நடுவே லாரி நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

 இதனால்  சக வாகன ஓட்டிகளும் அருகில் இருந்த பொதுமக்களும் சென்று விசாரித்த பொழுது லாரி ஓட்டுநர் போதையில் இருந்தது தெரியவந்தது இந்நிலையில் லாரியிலிருந்து இறங்கிய ஓட்டுனர் லாரியை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எடுக்க விடாமல் பேச்சுவார்த்தை ஈடுபட்டு அவர்களிடம் ரகளையில்  ஈடுபட்டார்.

 அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவரை தட்டி கேட்ட நிலையில் அவரிடம் இருந்து லாரியின் சாவியை பெற்று லாரியை அப்புறப்படுத்தினர்.

 தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் லாரியை பறிமுதல் செய்தனர்.  குடிபோதையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் கலவை பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது.

 குடிபோதையில் வாகனத்தை இயக்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக ஓட்டுநர் தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இதனால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.