வனத்துறையின் நிலத்தை தனிநபருக்கு பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் சஸ்பெண்டு!

உ.சசிகுமார்,
சின்னசேலம் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த சிவக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வனத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்ததால் இப்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள பத்திரப்பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சின்னசேலம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து நிலம், வீட்டுமனை, வீடு ஆகியவை வாங்க, விற்க வந்து செல்கின்றனர்.
இதில் வீட்டுமனை மற்றும் வீடு விவசாய நிலம் உள்ளிட்டவை வாங்க விற்க வரும் பொது மக்களிடமிருந்து விற்பனை தொகைக்கு ஏற்ப பணத்தை கழற்றிக் கொள்கிறார்கள்.
அதுமட்டுமின்றி சில இடங்களை சட்டவிரோதமாக கிரையும் செய்ய வருவார்களிடம் ஒரு பெரிய தொகையை பேரமாக பேசுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
இதனால் சின்னசேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பலரிடம் சார் பதிவாளர் சிவகுமாருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனி நபருக்கு சார்பதிவாளர் சிவக்குமார் சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கவனத்திற்கு செல்லவே சார் பதிவாளர் சிவக்குமாரை அழைத்து விசாரணை செய்த போது வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்தது உறுதியானதாம்.
இதனையடுத்து சிவக்குமாரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாகவும் தெரிகிறது. தற்போது சின்னசேலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிகமாக சார் பதிவாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறா£.