கிணற்றில் குதித்த சத்துணவு அமைப்பாளர்!

ஜி.கே.சேகரன்,
குடும்ப தகராறில் 100 அடி ஆழ கிணற்றில் குதித்து சத்துணவு பெண் ஊழியர் தற்கொலை முயற்சி. போராடி மீட்ட பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னமலையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் மலையாம்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மீனா சின்னமலையாம்பட்டு பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது நடராஜன் என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழ விவசாய கிணற்றில் மீனா குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கிணற்றில் குதித்து மீனாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மீனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மீனா தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.