சுடுகாடுக்கு செல்ல அரசு கொடுத்த இடம் எங்கே!
கு.அசோக்,
சோளிங்கர் நந்திமங்கலம் காலனியில் சுடுகாடு பாதையில்லாத அவலம் பாதை அமைக்க கோரிக்கை.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம் நந்திமங்கலம் காலணியில் சுமார் 35 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர்.
இந்த கிராமத்தில் இறந்தவர் சடலை மயான பகுதிக்கு எடுத்துச் செல்வதற்கு பாதை வசதி இல்லை என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்த பின் 2013ஆம் ஆண்டு அரசு சார்பில் தனிநபரிடமிருந்து மயான பாதை அமைப்பதற்காக நிலத்தை அரசு பெற்று கொடுத்தது.
ஆனால் மயான பாதை தற்போது வரை அமைக்காததால் அப்பகுதியில் உள்ள தனிநபர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே மாயனத்திற்கு செல்வதற்காக அளிக்கப்பட்ட இடத்தில் பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுடுகாடுக்கு செல்ல அரசு கொடுத்த இடம் எங்கே என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வயது முதிர்வு காரணமாக காலமானார் சடலத்தை எடுத்துச் செல்ல பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதி மக்களின் கோரிக்கை வலுத்துள்ளது.
ஆனால் இதெல்லாம் அதிகாரிகள் சாருங்க காதுகளுக்கு கேட்குமா என்று தான் தெரியவில்லை.