திரிஷாவை தவறாக பேசிய மன்சூர் அலிகான் விவகாரம்! கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம் மற்றும்ஆளுநர் தமிழிசை!

ம.பா.கெஜராஜ்,
நடிகை திரிஷாவுடன் தனக்கு நெருக்கமான காட்சி இருக்கும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அப்படி காட்சி ஏதும் இல்லாததால் கவலை அடைந்ததாகவும் மன்சூர் அலிகான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அப்படி அவர் பேசிய விவகாரம் பூதாகரமாக மாறியது.
இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்கு, "அதை பற்றி எல்லாம் அவரிடமே போய் கேட்டுக்கோங்க" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷாவும், முக்கிய கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் ஆவார். இதனால் தனது லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை மன்சூர் அலிகானுக்கு அவர் கொடுத்திருந்தார்.
அப்படியிருக்க லியோ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு மன்சூர் அலிகான் பேட்டி அளித்திருந்தார். அதில், திரிஷாவுடன் தனக்கு நெருக்கமான காட்சி இருக்கும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அப்படி காட்சி ஏதும் இல்லாததால் கவலை அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவர் பேசும் போது சில ஆபாசமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிஷா இதற்கு கடுமையான பதில் அளித்து இருந்தார். என்னை பற்றி மோசமான முறையில் பேசிய மன்சூர் அலி கானுடன் தான் இனி நடிக்கப் போவதில்லை என்றும், மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனிதக் குலத்திற்கே கெட்டப்பெயரை கெடுத்து வருகிறார்கள் எனவும் கொதித்திருந்தார்.
இதனிடையே, பா.ஜ.க. நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணையத் தலைவராகவும் இருக்கும் குஷ்பு, மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.
இதை மையப்படுத்தி தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்ட போது, "அதை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. அதை நீங்க அவர் கிட்டேயே போய் கேட்டுக்கோங்க" என பதிலளித்தார். அதன் பின்னர் சமாளித்த அவர், "பெண்களை பற்றி யார் தவறாக பேசினாலும் அதற்கு நான் கண்டனம் தெரிவிப்பேன்" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு அவர் ந நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரை தற்காலிகமாக சங்கத்திலிருந்து ஏன் நீக்கி வைக்க கூடாது என்று கூறி இருக்கிறது.
அப்படி இருக்க நடிகை குஷ்புவும் இதில் தலையிட்டு எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.