மழை நீர் சேகரிப்பின் மகிமை! ஆட்சியர் பங்கேற்பு!

க.பாலகுரு,
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
திருவாரூர் புதிய இரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தார்.
இப்பேரணியில், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியானது, திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.
பின்னர், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரைவாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்.இராஜேந்திரன், உதவி நிர்வாகப் பொறியாளர்.தமிழரசன், இணை நிலநீர் வல்லுநர்.அருள்அமுதன், பணிநியமன குழு உறுப்பினர்.பிரகாஷ், திட்டக்குழு உறுப்பினர்.சங்கர், வட்டாட்சியர்.செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.