தரை பாலத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
புதுப்பேட்டையில் உள்ள தரை பாலத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள புதுப்பேட்டை ரோடு தரைபாளத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
மேற்படி இந்த புதுப்பேட்டை ரோடு ரயில்வே தரை பாலம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு, பிரதான சாலையாக உள்ளது.
இந்த பாலத்தின் வழியாகத்தான் 300-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும்.
ஆகவே அந்த கிராமங்களின் விவசாய நிலங்களில் விளையும் காய்கள்,கீரைகள்,பழங்கள்,பூக்கள் உள்ளிட்ட பல்வேறு விலை பொருட்களை திருப்பத்தூர் உழவர் சந்தை மற்றும் காய் மார்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் மழை காலங்களில் தரை பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி ஏரி போல் ஆகிவிடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி பத்து கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதைக் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் தரப்பகராஜ் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் ரயில்வே துறையினர் தரை பாலத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், ரயில்வே தரை பாலத்தின் அருகே மழை நீர் செல்லும் பாதையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமிப்பு செய்து மழை நீர் செல்ல போதிய வழியில்லாமல் ரயில்வே தரை பாலத்தின் வழியாக மழைநீர் செல்கின்றது என்பது ஆய்வில் தெரியவந்தது.
இந்நிலையில், மழை தண்ணீர் செல்லும் கால்வாய்களை தூர் வாரி அகலப்படுத்தி சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உடன் உடன் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் துறை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.