த.வெ.க.மாநாட்டில் வெளிமாநில முதல்வர்கள் பங்கேற்பா? கோவில்களில் பிரார்தனை செய்யும் தொண்டர்கள்!

த.வெ.க.மாநாட்டில் வெளிமாநில முதல்வர்கள் பங்கேற்பா? கோவில்களில் பிரார்தனை செய்யும் தொண்டர்கள்!

ம.பா.கெஜராஜ்!

  தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம் கட்சிக் கொடி மற்றும் பாடலையும் அறிமுகம் செய்தும், விரைவில் மாநாடு நடைபெறும் எனவும் விஜய் அறிவித்தார்.

  அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது.   மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து காவல்துறை தரப்பில் 21 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.

   இது போன்ற நிகழ்வுகளுக்கு வழக்கமாக கேகப்படும் நடைமுறைதான் இது என்றாலும் கூட கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கேள்விக்கான பதிலை தயாரித்துள்ளனர். இந்த பதில்கள் அடங்கிய பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கும் பொருட்டு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று முன்தினம் விஜய் ஆலோசனை பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சட்டநிபுணர்களுடனும் கலந்தாலோசித்து பதில்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 அந்த வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பதில்கள் 5-ம்தேதிக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் வழங்குவாராம்.

  மேலும் மாநாட்டில் தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது.

  இந்நிலையில்  கோட் திரைப்படத்தை முன்னிட்டும், விக்கிரவாண்டியில் வருகின்ற மாநில மாநாடு மாபெரும் வெற்றி அடைய வேண்டியும், 2026 அரசியல் களத்தில் இறங்கும் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற வேண்டியும் அக்கட்சியினர் பலவிதமான வேண்டுதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியில் உள்ள ஸ்ரீஜெய் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

  விருதுநகர் மாவட்டம் மகளிரணி தலைவி ஜெகா விஜய் தலைமையில் நடைபெற்ற இதில் மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் பூமாலை ராஜா. மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தளவாய்புரம் ஒன்றிய நிர்வாகிகள், புனல்வேலி ஒன்றிய நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.  இவர்களுடன் சத்திரப்பட்டி, சம்சிகாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் கைகோர்த்தனர்.

 அட்டை மில் முக்கு ரோட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் இரவு உணவும் வழங்கப்பட்டது.