விவசாயிகளின் சலோ போராட்டத்துக்கு அடிபணிந்த மத்திய அரசு! ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி!

ம.பா.கெஜராஜ்,
மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்றும் அதற்கு முன்தினமும் நடத்தப்பட்ட விவசாயிகளின் சலோ பேரணியின் போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும், போலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசப்பட்டது.
மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் விவசாயிகளின் கூட்டத்தை போலிஸார் கலைத்தனர். இதில், குர்மீத் சிங் என்ற விவசாயி படுகாயம் அடைந்தார். அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்நிலையில் சமரச பேச்சுக்கு மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் திரண்ட விவசாயிகள் டெல்லி சலே? என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகரை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், போலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையாமல் தடுப்பதற்காக, ஹரியாணாவின் அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார் ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும், டாங்கிள் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிப்-14 ஆம் தேதி 12 அம்ச கே?ரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் திரண்டு டெல்லி மாநகருக்குள் நுழைய முயன்றதால் போலிஸார் பல்வேறு தடுப்புகளை அமைத்து அவர்களை கட்டுப்படுத்தினர். இதையடுத்து, காஜிபூர் எல்லையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதனைப்பார்த்து அஞ்சிய மத்திய அரசு பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு வருமாறு பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, சன்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் விவசாய சங்க தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.
ஆகவே இன்று சண்டிகரில் பேச்சுவார்த்தை நடக்ககிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டத்தை நிறுத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழக விவசாயிகள் ஆதரவு
இந்நிலையில், விவசாயிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ள நாடுமக்களே முதன்மை அமைப்பின் தலைவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ, தமிழ்நாடு பொதுமேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 15 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில் டெல்லியை நோக்கி கோரிக்கை பேரணி நடத்தும் விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதும், ரப்பர் புல்லட்டால் தாக்குவதும், சாலையை மறிப்பதும், கைது செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, சாகுபடிக்கான அடக்க விலையுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பிப்.16-ம்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள 15 அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.