30 ஆம் தேதி திருவாரூர் பல்கலைக்கு வருகிறார் ஜனாதிபதி! பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

30 ஆம் தேதி திருவாரூர் பல்கலைக்கு வருகிறார் ஜனாதிபதி! பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

க.பாலகுரு,

 திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தரவிருக்கிறார். அதையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு. நடத்தினர்.

 திருவாரூர் மாவட்டம்,  அருகே நீலக்குடியில் அமைந்துள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

 இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிக்க உள்ளார்.

 இந்த நிலையில் குடியரசு தலைவர் வருகையை ஒட்டி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. மேலும் குடியரசு தலைவர் ஹெலிகாப்டரில் வருவதால்  ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

 குடியரசு தலைவர் இறங்கும் தளம் மற்றும் தங்குமிடம் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள்

 குறித்து இன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன்,தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர்.ஜியாவுல் ஹக், மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள்  ஆய்வு செய்தனர்.