இந்து தலைவருக்காக வாதாடிய இஸ்லாம் வழக்கறிஞர் கொலை!

இந்து தலைவருக்காக வாதாடிய இஸ்லாம் வழக்கறிஞர் கொலை!

 ம.பா.கெஜெராஜ்,

 வங்கதேச நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்து துறவி சார்பில் வாதாடிய பயிற்சி வழக்கறிஞர் கொல்லப்பட்டிருக்கிறார்.

 இந்துக்கள்  சிறுபான்மையினராக உள்ள வங்க தேசத்தில் போராட்டங்களை தூண்டிவிட்டார் என்கிற காரணத்துக்காக இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர்.

   இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

   வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

  அவர்மீது இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாசை விடுவிக்கக் கோரி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. கோரி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

  அப்படியிருக்க,  வங்கதேச நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் இந்து தலைவரும், இஸ்கான் துறவியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பாக வாதாடும் ஒரு முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டார்.    

 உயிரிழந்தவர் பயிற்சி வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் அலிப் என்பவர் ஆவார்.