என் மகன் என்ன ஆனான்!

என் மகன் என்ன ஆனான்!

ஜி.கே.சேகரன்,  

வெளிநாட்டிற்குச் சென்ற மகன்! மூன்று வருட  காலமாக தொடர்பு இல்லாத காரணத்தால் என் மகனை  மீட்டுத் தரவேண்டும் என தாய் கலெக்டரிடம் மனு அளித்தார்.

  திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தோழன் தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் தங்கவேலு இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வேலைக்கு சென்று உள்ளார். ஆனால் குடும்பத்தாருடன் கடந்த 3 ஆண்டுகளாக எந்த தொட்ர்பும் இல்லை.

   இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் பேசினான் அதிலிருந்து இதுவரை எந்த ஒரு போன் காலும் வரவில்லை மேலும் என்னுடைய மகன் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை இல்லை எனவே எனது மகனை மீட்டுத் தரும்படியும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில்  தாய் அலுமேலு மனு அளித்தார்