பாஜக பிரமுகரை போட்டுத் தள்ளிய பாஜக பிரமுகர்! தனிபடையிடம் சிக்கி சிறைக்கு சென்றார்!

க.பாலகுரு,
பாஜக பிரமுகர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதே கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருவாரூர் அருகே, முன்னாள் பாஜக பிரமுகரை கொலை முயற்சி செய்ததாக திருவாரூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளரை¢ தனிப்படை போலிசார் தேடி வந்தனர். தேடப்பட்டு வந்த பாஜக பிரமுகர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர்அருகே குடவாசல் காவல்சரகத்திற்கு உட்பட்ட உவகைபாலம் அருகில் கடந்த பத்தாம்தேதி காவனூர் வெள்ளாளர்தெருவை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மகன் மது என்கின்ற மதுசூதனன் வயது 40. அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 6 நபர்கள் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார்.
பின்னர் அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் தற்போது வரை சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட விவசாய அணி தலைவராக இருந்து வந்துள்ளார். இவரது மனைவி ஹரிணி கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் குடவாசல் காவல்நிலையத்தில் கொலைமுயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டு துணைக் காவல்கண்காணிப்பாளர் சரவணகுமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.
அதில் அம்மாபேட்டை சேர்ந்த சரவணன் வயது 24, திருவாரூர் காட்டூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் வயது30. ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மற்றும் கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவும் மேலும் மதுசூதனன் வலைதளத்தில் பாஜக கட்சியினர் நிர்வாகிகள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் இந்த கொலைமுயற்சி நடந்ததாக தெரியவந்தது.
மேலும் தலைமறைவு குற்றவாளிகளான ஒன்பதுபேரை தேடி வந்தநிலையில் ஏ1 குற்றவாளியாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், ஏ2வாக மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்அரசன் இருப்பதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார். மேலும் ஒன்பது பேர்களை தேடிவருவதாகவும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு கோவையில் பதுங்கி இருந்த பாஜக மாவட்டத்தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசனை தனிப்படையினர் தேடி வந்தநிலையில் நேற்று மதுரை மாவட்டம் தேனியில் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் மேலும் தனிப்படையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் காவல்துறை விசாரணைக்கு பிறகு செந்தில்அரசன் திருவாரூர் மகளிர்நீதிமன்றத்தில் கூடுதல்நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வரும் ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இது தொடர்புடைய எட்டுபேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.