ஙோ.....தா...பூ.....என்று ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த காஞ்சி வடகலை தென்கலை கோஷ்டிகள்!

தாம்பரம்.அ.முரளிதரன்,

   காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளில் வடகலை - தென்கலை பிரச்சினை வீதிக்கு வந்தது. காலம் காலமாக அவர்களுக்குள் புகைந்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரம் தற்போது பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு கேவலமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

  108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே அவ்வப்பொழுது பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

 இதனை சரிபடுத்த  கோயில் விழாக்களில் திவ்ய பிரபந்தமோ, வேத பாராயணமோ இரு பிரிவினரும் கோஷ்டிகள் பாட கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 அப்படியிருக்க நேற்று முன்தினம் கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு வரதர் காட்சி அளிக்கும்போது,  தாத்தாச்சாரி குடும்பத்தினர் மந்திர புஷ்பம் எனும் வேத மந்திரங்களை  பாட  தென் கலை பிரிவினரும்  பாடுவோம் என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

 கோவில் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி வேத பாராயணம் செய்ததால்  அங்கு பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டது. உடனே அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்தனர்.

 இந்நிலையில், நேற்று கோவிலில் இருந்து வரதர் கிளம்பி சுமார் 12 வீதிகள் வழியாக அருள் பாலித்த படி  பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, மீண்டும் தென்கலை வடக்கலை இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

 பொதுமக்கள் பார்கிறார்களே என்கிற இங்கீதம் கூட இல்லாமல், ஙோ....தா, பூ...என்று  காவல்துறையினர் முன்னிலையிலேயே வடகலை தென்கலை என இரு பிரிவினரும் மாறி மாறி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டனர். ஒதுவர் முட்டியை தூக்கி எட்டி உதைக்க பாய்ந்து அய்யர்களிளே நாங்கள் ரவுடியாக்கும் என்பதை போல எகிறினார்.

 பல ஆண்டுகளாக தேவராஜ கோவில் வளாகத்துக்குள்ளையே நடந்த இந்த வாக்குவாதம் தற்போது வீதிக்கு வந்துவிட்டது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

  தேவராஜ சுவாமி திருக்கோயிலின் மணியகாரர் து.கிருஷ்ணகுமார்

என்பவர் இரு பிரிவினர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது,  ஒரு  பிரிவை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுக்க முற்பட்டார் அதைக்கண்ட கிருஷ்ணகுமார் அந்த செல்போனை தூக்கி எறிந்தது அங்கு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் கோயில் நிர்வாக தர்மகர்த்தா உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் அவர்கள் முன்னிலையிலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில் வடக்கலை தென்கலை பிரச்சினையால் நாங்கள் முழு மனதுடன் பெருமாளை தரிசிக்க முடியவில்லை என பக்தர்கள் புலம்புகிறார்கள்.

  நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தும் இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ  தீர்வு காண ஏன் முற்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.