காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மர்மமரணம்!

கு.அசோக்,
காட்பாடி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கால்வாயில் வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வேலூர்மாவட்டம், காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு எதிரே கால்வாயில் சுமார் 30 வயது உடைய வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் பிணத்தை மீட்டனர்.இறந்து கிடந்த வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், நேற்று அப்பகுதியில் இவர் கிழிந்த ஆடைகளுடன் சுற்றி திரிந்தார் என்றும்,¢ இந்தி மொழியில் பேசி பொதுமக்களிடம் உணவு மற்றும் குடிநீர் கேட்டார் எனவும் தெரிய வந்தது.
எனவே இறந்து கிடந்தவர் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் ஏதாவது மோதி இருந்தாரா அல்லது கால்வாயில் தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.