மாடுகளை வெட்டி சித்ரவதை செய்த கொடூரன் பிடிபட்டான்!

மாடுகளை வெட்டி சித்ரவதை செய்த கொடூரன் பிடிபட்டான்!

  ஜி.கே.சேகரன்,

கடந்த 3 மாதகாலமாக இரவு நேரங்களில்  10க்கும் மேற்பட்ட மாட்டை கத்தியால் வெட்டி வந்த நபரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கோட்டை தெரு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் நதீம் (40).  இவர் மூன்று மாத காலமாக இரவு நேரங்களில் மாட்டை கத்தியால் வெட்டி வந்துள்ளார்.

  இதனால் அப்பகுதியில் உள்ள மாடுகள் அனைத்தும் காயங்களுடன் சுற்றி வந்தன.

  இந்த நிலையில் தொடர்ந்து மாட்டை கத்தியால் வெட்டி வரும் நபரை அப்பகுதி மக்கள் தேடி வந்துள்ளனர்.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அமித் மகன் மத்தின்(30) என்பவருடைய மாட்டை நேற்று இரவு அதே போல் கத்தியால் நதீம் வெட்டியுள்ளார்.

  இதனை மத்தின் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கூறுகையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாடுகளை வெட்டி சித்ரவதை செய்த நதீமின் வீட்டை முற்றுகையிட்டனர்.

  இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நதீமை காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து நகர போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

 மேலும் தொடர்ந்து மூன்று மாத காலமாக இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாடுகளை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.