ஒப்பந்ததாரரின் அடாவடியால் குப்பை எரிந்து மக்கள் அவதி!

கு.அசோக்,
சோளிங்கர் அருகே நகராட்சி குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு மலைபகுதிகளில் தீபரவி மூலிகை செடிகளும் நாசமாகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அள்ளி நகரத்தை தூய்மையாக வைத்திருக்க ஒரு டன் குப்பையை அகற்றிட 4,100 ரூபாய் விதம் தனியாரிடம் ஒப்பந்த போடப்பட்டது.
ஆனால், குப்பைகளை அல்லும் தனியார் ஒப்புததாரர் குப்பைகளை தரம் பிரிக்காமல், பானாவரம் சாலை ஜே.ஜே நகர் பகுதியில் உள்ள உடையார்பாளையம் மலைப்பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியதால் தீ பரவி சுமார் நூறு டன் குப்பை எரிந்து சாம்பல் ஆகியது.
இதில் நச்சுக்காற்று வெளியேறியதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கண்ணீர் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்பட்டதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து குப்பைகளை தீயிட்டு கொளுத்துவது வாடிக்கையாக உள்ளது. மலைப்பகுதியில் உள்ள மூலிகை செடிகள் மரங்கள் சாம்பல் ஆகிறது . நகராட்சி நிர்வாகம் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினார்கள்.