ஒருதலைபட்சமாக செயல்படும் தாசில்தாரர்!

ஜி.கே.சேகரன்,
பொதுவாக செயல்படக்கூடிய பதவியை வகிக்கும் தாசில்தாரர் ஒருவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி பொதுமக்கள் கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
வேலூ£ ¢மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் தோளப்பள்ளி கிராம மக்கள் புகார் மனுவினை அளித்தனர். அனைக்கட்டு வட்டாட்ச்சியா வேண்டா மீது அளித்த அந்த புகாரில், அனைக்கட்டு தோளப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த ஆலயத்தை இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்களே அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோவிலில் தனி நபர் ஒருவர், (ராஜவேலு) நான் தான் மேட்டுகுடி என தன்னிச்சையாக குறிக்கொண்டு வட்டாட்ச்சியரிடம் புகார் மனு அளித்து திருவிழாவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்.
வரும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் திருவிழாவை நிறுத்தும் நோக்கத்தில் வழிபாட்டை தடுக்கும் நோக்கத்தில் வட்டாட்ச்சியரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
அந்த ஒரு நபரின் புகாரை வட்டாட்சியர் முறையாக விசாரணை செய்யாமல் கோவிலின் பூட்டை வட்டாட்ச்சியரே ஆட்களை வைத்து உடைத்து புகார் அளித்த ராஜவேலு என்ற தனி நபரிடமே சாவியை ஒப்படைத்துவிட்டார்.
இதனால் ஏமாற்றமடைந்த மக்கள், வட்டாட்ச்சியர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கிராம மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியை சந்தித்து மனு அளித்தனர்.
இதனை விசாரித்த ஆட்சியர் சுப்பு லெட்சுமி திருவிழா சுமூகமாக நடக்க நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
இதன் பேரில் அவர்கள் திரும்பி சென்றனர் இன்று 4-5-2024 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டத்தை நடத்தவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளா£.¢ வட்டாட்ச்சியர் மீது கிராம மக்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி தாசில்தார் வேண்டா அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது