ராத்திரிக்கு உன் மனைவியை இங்கேயே விட்டு செல்.. கடன் தவணையை செலுத்திவிட்டு கூட்டிக்கிட்டு போ! ஐடிஎப்சி வங்கி ஊழியர்களுன் அடாவடி!

டி.இ.முகமது,
ராத்திரிக்கு உன் மனைவி இங்கேயே இருக்கட்டும்.. கடன் தவணையை செலுத்திவிட்டு கூட்டிக்கிட்டு போ என்று ஐடிஎப்சி வங்கியில் கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை அடமானம் பிடித்துச் சென்ற பரிதாபம் சேலம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:- சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் இவர் இவர் ஐடிஎப்சி பஸ்ட் பேங்க் என்கின்ற வங்கியில் பர்சனல் லோன் வாங்கி உள்ளார்.அது லோன் வழங்கும் பிசினஸ் கரஸ்பாண்டன்ட் கிளை ஆகும்.
அங்கு கடன் பெற்ற பிரசாந்த் 40 வாரங்களாக தவணைத் தொகையை முறையாக செலுத்தி வந்துள்ளார்.
அப்படி இருக்க கடந்த வாரம் தவணையை செலுத்த இயலவில்லை. ஆகையால் சற்று தாமதம் ஆனது.
சம்பவதன்று மாலை சுமார் 5 மணிக்கு பிரசாந்த் வீட்டுக்கு வந்த கலெக்ஷன் ஊழியரான சுபா என்ற பெண் பிரசாந்த் எங்கே ஏன் கடனை செலுத்தவில்லை என்று மனைவியிடம் அதிகாரமாக கேட்டிருக்கிறார்.
அதற்கு பிரசாந்தின் மனைவி கணவன் வெளியில் சென்று இருக்கிறார். இந்த வாரம் மட்டும்தான் நிலுவை இருக்கிறது நாளைக்குள் தவணையை செலுத்தி விடுவார் என்று சொல்லி இருக்கிறார்.
அதை காதில் வாங்கிக் கொள்ளாத பெண் ஊழியர் சுபா பிரசாந்தின் மனைவியை அடிக்க கை ஓங்கியதுடன் ஆடைகளை களைந்து தரதரவென்று இழுத்துச் சென்று இருக்கிறார்.
நேரடியாக வங்கிக்குச் அவரைக் கூட்டி சென்று பலர் முன்னிலையில் அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து தகவல் அறிந்த பிரசாந்த் வங்கிக்கு விரைந்து வந்து ஒரு வாரம் கூட நான் தவணை நிறுத்தியதில்லை இந்த வாரம் மட்டும் சற்று தாமதமானது.அதைக் கூட காலையில் செலுத்தி விடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு வங்கி ஊழியர்களும் அந்தப் பெண் ஊழியர் சுபாவும் மிகவும் தெனாவட்டாக பணம் கொடுத்துவிட்டு உன் மனைவியை கூட்டிக்கொண்டு போ இன்று இரவு வங்கியிலேயே அவள் தங்கட்டும் போடா வெளியே இன்று விரட்டி இருக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் விரைந்து வந்த காவல் அதிகாரிகள் அங்கே அடமானம் பிடிக்கப்பட்டிருந்த பிரசாந்தின் மனைவியை மீட்டு பிரசாந்திடம் ஒப்படைத்தனர்.
தான் செய்தது தவறு என்பதை கூட உணராத வங்கி ஊழியர் சுபா போலீசார் முன்னிலிலேயே தாறுமாறாக எகிறினினார்.
இத்தனைக்கும் தவணைத் தொகை வெறும் 770 மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் பல வங்கிகளால் நடந்து வருகிறது, ஏழைகளுக்கு தாமாக முன்வந்து பர்சனல் லோன் கொடுத்துவிட்டு, பின்னர் அவர்களை கடன்காரர் ஆக்குவதும், அடமானம் பிடிப்பதும், ரௌடிகளை விட்டு மிரட்டுவதும், ரிட்டையர்டு போலீசர்களை விட்டு மிரட்டுவதும் தொடர் கதையாக உள்ளது.
ஆகவே இதை தமிழக அரசு இவற்றை கண்டு கொள்ள வேண்டும் என்று ஏழை மக்கள் விரும்புகிறார்கள்.