மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆபத்தான பயண செய்த மக்கள்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆபத்தான பயண செய்த மக்கள்!

கு.அசோக்,

ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் தென்னை மரம் மின்கம்பத்தின் மீது சாய்ந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு7 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், நேற்று வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டத்தில் 110 டிகிரியை  கடந்து பாரன் ஹீட்  வெப்பம் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில்  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் திடீரென சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி  மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழை பூமியை குளிர வைத்தது.

  அதில் தோட்டாளம் பகுதியில் சுமார் 50 அடி உயரம் கொண்ட தென்னை மரம் ஒன்று அங்குள்ள  மின்கம்பத்தின் மீது சாய்ந்து சாலையில் விழுந்துபோக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வடகாத்திப்பட்டி துணை மின் நிலைய துணை மின் பொறியாளர்  மற்றும் மின்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தும் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

 இதனை தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டும் சாலையில் சாய்ந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் தென்னை மரத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

 ஆகவே, அவ்வழியாக செல்லும் குளிதிகை, ராசம்பட்டி, சாந்திநகர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய மக்கள்  சாலையில் சாய்ந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் தென்னை மரத்துக்கடியில் ஆபத்தான முறையில் பயணம் செல்லக்கூடிய சூழல் நிலவி வந்தது.

 தொடர்ந்து மின்துறை அலுவலர்களை அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்ட போது பொது மக்களுக்கு பதில் அளிக்காமல் அலட்சியமாக போனை துண்டித்ததாக கூறப்படுகிறது.

  இதேபோல் சம்பவம் நடந்து சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை என குற்றம் சாட்டினர் மக்கள்.

 இதனால் சுமார் 7  மணி நேரத்துக்கு மேலாக மாதனூர், தேவிகாபுரம் ,தோட்டாளம், குருதிகை, வெங்கிலி, பச்சகுப்பம், வடகாத்திப்பட்டி, கூத்தம்பாக்கம், பாலூர், புதூர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருளில் மூழ்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 மின்சாரம் இல்லாமல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மாணவர்கள் கல்வி கற்க கூடிய சூழலும், வணிகர்கள் வியாபாரத்தில் ஈடுபட கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அப்பகுதி  மக்களின் கோரிக்கையாக உள்ளது.