டார்கெட் வேலுமணி! திமுகவின் அதிரடி!!

டார்கெட் வேலுமணி! திமுகவின் அதிரடி!!

 ம.பா.கெஜராஜ்,

 வெற்றிக்கூட்டணி என்று பேசப்படும் இந்தியா கூட்டணியில் திமுக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி திமுக ஊழல் கட்சி என கடுமையாக விமர்சித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். இருவரது விமர்சனமும் ஸ்டாலினை வெறுப்பேற்றும் என நினைத்த நேரத்தில், அதையெல்லாம் சட்டை செய்யாத முதலமைச்சர் இந்த விவகாரங்களை பொறுமையாக கையாள முடிவெடுத்து திமுகவின் வழக்கறிஞர் பிரிவுக்கு உற்சாக மூட்டியிருக்கிறாராம்.

 பா.ஜ.க. செந்தில் பாலாஜியை முதல் ஆளாக குறி வைத்ததே அவர், தீவிரமாக தேர்தல் வேலை பார்க்கிறார், கொங்கு மண்டலத்தில் குறுகிய காலத்தில் கட்சியை பலப்படுத்துகிறார் என்பது தான் காரணமாம். ஆகவே அவரை ஒடுக்கினால், கொங்கு மண்டலத்தில் திமுக மீண்டும் பலவீனமாகும் என்பது டெல்லியின் கணக்கு.

 ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் முக்கிய கொங்கு புள்ளியை தூக்க திமுக திட்டமிடப்பட்டுள்ளதாம்.

 அதாவது திமுக வின் டார்கெட் வேலுமணியாம். அதிமுகவைப் பொறுத்தவரை கொங்கு மண்டலம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கு நீண்டுள்ளது. அதிமுக சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் வேலுமணி பெயரை உச்சரித்து பதவியேற்றது நினைவிருக்கலாம். அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த எஸ்.பி.வேலுமணியை வளைத்துவிட்டால் அதிமுகவும், பாஜகவும் திணறும் என்பது திமுக வின் புதுக்கணக்காம்.

  ஏற்கனவே அவரை குறிவைத்து  நடந்த ரெய்டுகளில் சிக்காமல் தப்பித்த வேலுமணிக்கு இந்த முறை அப்படி நடக்காதாம்.