திடீர் பரபரப்பான ஏலகிரி! இவர்கள் தான் காரணம்!

ஆர்.ரமேஷ்,
ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூர் பகுதியில் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் சாகச சுற்றுலா தல அமைக்கும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூர் பகுதியில் சுற்றுலாத்துறை மூலமாக நடைபெற்றுவரும் சாகச சுற்றுலா தல பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பணிகளை சரியானமுறையிலும் விரைவாகவும் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
மேலும் 2024- 2025 நிதியாண்டுக்கான அறிவிப்பில் ஏலகிரி மலை புங்கனூர் ஏரியில் சற்றுலா மேம்பாட்டு பணிகள் சுற்றுலாத்துறையின் வாயிலாக மேற்கொள்ள ரூ.1 கோடியே 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏரி பகுதியை ஆய்வு செய்து மேற்கொள்ளப்படவேண்டிய பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து பணிகள் மேற்கொள்ள அறிவுருத்தினார்கள். மேலும் அதனை தொடர்ந்து நிலாவூர் ஏரி மற்றும் ஏலகிரிமலை படகு இல்லத்தை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கொரோனா நோய் தொற்று காலங்களில் கோடை விழா நடத்த இயலவில்லை. தற்போது ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் வருகிறார்கள். இதனை மனதில் கொண்டு வருங்காலங்களில் கோடை விழா நடத்தப்படும் என்பதை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி, சுற்றுலா வளர்ச்சி கழகம் திரு.குணேஸ்வர், சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) திரு.ஆனந்தன், உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.