செக்ஸ் பேராசிரியரை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவ சிங்கங்கள்! மிரட்டலாக பேசிய இன்ஸ்பெக்டர் லதா!
ஜி.கே.சேகரன்,
கௌரவர விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊரீசு கல்லூரியின் துணை முதல்வரை கைது செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துடன், நுழைவாயில் கேட்டின் பூட்டை உடைத்து வெளியேறினர். பின்னர் ஊர்வலமாக சென்று மகளிர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூரில் பழமைவாய்ந்த ஊரீசு கல்லூரியின் துணை முதல்வராக இருப்பவர் அன்பழகன். இவர் இதே கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று டிஜஜியிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், வேலூர் அனைத்து மகளிர் நிலையத்தில் துணை முதல்வர் அன்பழகன் மீது வேண்டா வெறுப்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அன்பழகன் தப்பி தலைமறைவானார்.
இந்நிலையில், போலீசார் அன்பழகனை கைது செய்ய முயலவில்லை என்றும், முன் ஜாமின் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன் அதற்காக அவகாசம் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த ஊரீசு கல்லூரி மாணவர்கள் இன்று (மார்ச்- 21) வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டம் செய்ததுடன் கல்லூரியின் நுழைவாயில் கேட்டின் பூட்டை உடைத்து ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அன்பழகனை கைது செய் என்று முழங்கினர்.
பின்னர் அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாலியல் தொல்லை கொடுத்த துணை முதல்வர் அன்பழகனை கைது செய்ய கோரி முழக்கமிட்டனர்.
இதனால் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உட்பட பலர் அங்கு வந்து சேர்ந்தனர்.
பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவர்களின் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பேராசிரியரை கைது செய்ய வேண்டுமெனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் காட்பாடியை அடுத்த ஆந்திர மாநில எல்லையில் உள்ள ராசனப்பள்ளி கிராமத்தில் தங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு அவர் இன்று காலை ஏரிக்கரையில் ஜாலியாக வாக்கிங் சென்றதுடன், என் மீது நடவடிக்கை பாயாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன் என்றும், இதெல்லாம் இரண்டு நாட்களில் சரியாகிவிடும் நான் உத்தமன் என்றும் அந்த கிராமத்தில் புரடா விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா அவர்கள், பாதிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளரிடம் புகார் பெறுவது முதற்கொண்டு, பாலியல் குற்றவாளி அன்பழகனை கைது செய்யாதது வரையான மெத்தனத்தால் மாணவர்கள் போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர் என்றும்,, மாணவர்களை மிரட்டும் தொனியாகவும் அந்த இன்ஸ்பெக்டர் பேசியிருக்கிறார் எனவும் பலரும் குமுறுகிறார்கள்..
அதெல்லாம் இருக்கட்டும் மாணவர்களின் போராட்டத்துக்கு பிறகாவது அன்பழகனை கைது செய்வார்களா?
குறிப்பு:- கல்லூரி நிர்வாகம் அன்பழகன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது. அதே போல் ஆர்.ஜே.டி.யும் அன்பழகன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக தகவல்.