விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டர் புனிதா! விவசாயிகள் ஆட்சியரிடம் புகார்!
கு.அசோக்,
வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் புனிதா விவசாயிகள் தங்களின் பட்டா நிலத்தை சமன்படுத்தியதற்காக அவர்கள் ஏரியில் மண் எடுத்ததாக பொய் வழக்கு போட்டு விவசாயிகளை கைது செய்து தொடர்ந்து மிரட்டிவருகிறார் - ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் - வனத்துறையினர் விவசாயிகள் மீது போட்ட வழக்கு பொய் வழக்கு என தமிழக முதல்வர் கூறியும் அதனை வாப்பஸ் வாங்க வனத்துறையினர் மறுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு - நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை.
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டமானது நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் விவசாயிகள் தங்களின் சொந்த பட்டா நிலத்தை வேளாண் பணிக்காக சீரமைத்தனர். அப்போது வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் புனிதா அவர்களை மிரட்டி பொய் வழக்கு போட்டு ஜேசிபி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததுடன் விவசாயிகளையும் கைது செய்தார்.
ஆனால் வட்டாட்சியர் விசாரித்து விவசாயிகள் சொந்த நிலத்தில் தான் சீரமைத்தார் ஏரியில் மண் எதுவும் எடுக்கவில்லை வட்டாட்சியர் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளார்.
ஆனால் காவல் ஆய்வாளர் புனிதாவோ ஏரியில் மண் எடுத்ததாக எழுதிகொடுக்கும் படி விவசாயிகளை மிரட்டுகிறார்.
ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆய்வாளர் புனிதாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் கிராமங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்க விவசாயிகளை ஏமாற்றி லஞ்சம் வசூலிக்கபடுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினார்கள்.
அதேபோல் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும் வனத்துறையினர் பொய் வழக்கு போட்டு விவசாயிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் துணை முதல்வர் வனத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தோம் அவர்களும் இது பொய் வழக்கு என்று கூறினார்கள்.
ஆனால் வனத்துறை அந்த பொய் வழக்கை திரும்ப பெற மறுப்பதாகவும் குற்றம் சாட்டி பேசினார்கள்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் விவசாயிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்துள்ளனர் மேல் அரசம்பட்டு பகுதிகளில் பெரும்பாலும் விவசாயிகளே ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் அவைகளும் அகற்ற நடவடிக்கை எடுக்கபடும் மேலும் மேல் அரசம்பட்டு அணையை கட்டவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என பேசினார்