டிரிபில்ஸ் சென்ற சிறுவர்கள் தடுத்து நிறுத்தம்! பைக் கொடுத்தவர் மீது பாய்ந்தது வழக்கு!

ஜி.கே.சேகரன்,
18 வயது நிரம்பாத சிறுவரிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்தனுப்பிய பெற்றோர் கைது செய்யப்பட்டார்.
வேலூ£ ¢மாவட்டம், வேலூரில் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது மூன்று இளம் சிறார்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்ததைக் கண்டு அவர்களை மடக்கினர்.
அந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி மூன்று சிறார்களையும் காவல்நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் கணியம்பாடியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் சென்னையில் பணியாற்றுகிறார். ஆகவே அவரது புதிய இருசக்கர வாகனத்தை அவர் அவருடைய மாமா சுந்தர் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதனை அறிந்த ஆகாஷின் அக்காள் மகன் இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு, உடன் இரண்டு நண்பர்களுடன் வேலூர் வந்ததுள்ளான்.
இத்தனைக்கும் அவன் கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில் தான் வாகன சோதனையின் போது சிக்கினர்.
அப்படியிருக்க மூன்று பேரும் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களை ஆட்டோவில் அனுப்பிவைத்துவிட்டு, அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களுக்கு மோட்டார் சைக்கிளை கொடுத்தனுப்பிய சுந்தர் மீது வடக்கு காவல்நிலையத்தி எட்டு பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோட்டார் வாகன சட்டப்படி சம்பந்தபட்ட வாகனத்தின் பதிவு சான்றை 12 மாதங்களுக்கு ரத்து செய்தும் மேலும் வாகனத்தை ஓட்டிய இளம் சிறார் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறுவதை தடை செய்யுமாறும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
18 வயது நிரம்பாத சிறுவர்களை புதிய மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பது தற்போது வேலூரில் துவங்கியுள்ளது.