சமூக நல பாதுகாப்பு இயக்கம் தொடக்கம்!

எம்.ஏ.கண்ணன்
தேனி மாவட்ட குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கத்தின் துவக்க விழா பெரியகுளம் கோவிந்தன்-மயில்தாயம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.விழாவினை பரமராஜ்,நீதிபதி(ஓய்வு) அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
காமராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மணிகார்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார். மணிகண்டன் தலைமையுரை நிகழ்த்தினார்.நாராயணன் அவர்களால் விழா பேருரை ஆற்றப்பட்டது.
சங்கர் ,மாநில பொதுச்செயலாளர், நல்லாசிரியர் முத்துமாணிக்கம்,மாவட்ட செயலர்,மற்றும் ராசிகுணசேகரன் அவர்களால் வாழ்த்துரை வழங்கப் பெற்றது.
ராஜா பொன்விக்னேஷ் மற்றும் பல மாவட்ட நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.காமாட்சி அவர்கள் விழாவினை தொகுப்பு வழங்கிநன்றி உரை ஆற்றினார்.