தண்டவாளத்தில் ஹாயாக உறங்கிய மனிதர்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே கேட் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கிய அலப்பறை செய்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நியூ டவுன் ரயில்வே கேட் பகுதியில் ஒருவர் துண்டை விரித்து வீட்டில் உறங்குவதை போல் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து கொண்டிருந்தார்.
அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் அவரை தண்டவாளத்தில் இருந்து வெளியேறும் படி கூறியும் வெளியேறாமல் அங்கேயே படுத்து கொண்டிருந்தார்.
இதை குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.