ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்!

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்!

 ஜி.கே.சேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் ஊராட்சி  சமத்துவபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 30 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.    

   அப்படியிருக்க பள்ளியின் சமையலறை எதிரே ஊராட்சி நிர்வாகத்தால் தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் தற்போது வரை மூடப்படாத காரணத்தால் அந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

  இதனால் நோய்த் தொற்று அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது, எனவே அவற்றை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம்  புகார் அளித்து வந்தனர்.

 இருந்த போதும் இதுவரைமூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   இந்த தகவல் இந்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வருகை சென்று பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது பரபரப்பு காணப்பட்டது.