ரேஷன் அரிசி கடத்தி சிக்கிய அதிகாரிகள்!

ரேஷன் அரிசி கடத்தி சிக்கிய அதிகாரிகள்!

கு அசோக்,

அரக்கோணத்தில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குடோன் பொறுப்பாளர் உட்பட 4  பேரை புட்செல் போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை.1550 கிலோ அரிசி பறிமுதல்.

அரக்கோணம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் அரிசியை முறைகேடாக பதுக்கி விற்பனை செய்த குடோன் பொறுப்பாளர் உட்பட 4  பேரை புட்செல் போலீசார் கைது செய்தனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன் அமைந்துள்ளது.  இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

   இந்நிலையில் குடோன் பொறுப்பாளர் மற்றும் கற்பகம் கூட்டுறவு கிளார்க் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை கடத்தி முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

  இதைத்தொடர்ந்து வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் அரக்கோணத்தில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் சோதனை நடத்தினர்.

   இந்த சோதனையில் 1,550 கிலோ எடையுள்ள 31 மூட்டை அரிசியை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து குடோன் பொறுப்பாளர் மகாராஜன், கிளார்க் தமிழ்ச்செல்வன், கற்பகம் சொசைட்டி கிளார்க் பார்த்திபன், லாரி டிரைவர் கோபிநாத் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

   மேலும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து அந்த லாரி யாருக்கு சொந்தமானது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.