தேர்தல் நேர்மையாக நடக்க மீண்டும் வாக்கு சீட்டு முறை வேண்டும் சீமான் பேச்சு!

கு.அசோக்,
வேலூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகளை சேகரித்தார் - தேர்தலை மீண்டும் வாக்குசீட்டு முறையிலேயே நடத்தினால் தான் நேர்மையாக இருக்கும் சீமான் பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் மண்டி வீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேலூர் நாடார்ளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் பண நாயகத்தை வீழ்த்தி ஜனநாயகம் மலர வேண்டும்.
தேர்தலை வாக்குசீட்டு முறையிலேயே நடத்த வேண்டும், நான் சிறையிலிருந்து வெளியில் வந்து தான் கட்சியே ஆரம்பித்தேன் என் மீது தமிழ்நாட்டில் 136 வழக்குகள் உள்ளது.
திமுக ஆயிரம் ரூபாயை கொடுத்ததை மட்டுமே பேசுமே தவிர வேலூர் எதுவும் பேசாது.
மாட்டு இறைச்சிக்கு தடை போடும் இந்த பாஜக ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள்