இதோ சொல்லிடாருல்லே... காரணத்த?

ஜி.கே.சேகரன்,
கடந்த சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் பொறுப்பாளராக செயல்பட்டதாலேயே தன்னுடைய தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார் வீரமணி முன்னாள் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/MDXc77kpVRI" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் போட்டியிடும் பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய செங்கோட்டையன் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால் அதிமுக கட்டாயமாக வெற்றி பெறும் எனவும், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக எந்த ஒரு குறையும் கூற முடியாத அளவிற்கு ஆட்சி நடத்தினார் என்றும் சொன்னார்.
பின்னர் ஏதோ சில காரணங்களால் நாங்கள் இப்போது எதிர்க்கட்சியாக உள்ளோம் எனவும், இந்த தொகுதியின் முன்னாள் அமைச்சரான வீரமணி கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் மேற்பார்வையாளராக செயல்பட்டதால் தன்னுடைய தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார் எனவும் அடேங்கப்பா காரணத்தைச் சொன்னார்.
மேலும் நடைபெற நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.