அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு!
ஜி.கே.சேகரன்,
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பயிற்சி வகுப்பின் போது வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இப்போது தேர்தல் வகுப்புகளை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு செய்தனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் ,காட்பாடி,அரியூர்,குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தல் வகுப்புகள் இன்று நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக நடைபெற்ற இதனை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி மற்றும் தேர்தல் பார்வையாளர் ரூபேஷ் குமார் ஆகியோர் நேரில்j பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் அளிக்கும் மையம் அங்கு அமைக்கப்பட்டிருந்தது.
இதில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அங்கு வரிசையில் நின்று தபால் வாக்கினை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினர்.