எடப்பாடி பிரச்சாரத்துக்கு பின்னர் நீலகிரி கள நிலவரத்தில் திருப்பம்!

ம.பா.கெஜராஜ்,
நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் திமுக சார்பாக சிட்டிங் எம்பி ஆ.ராசா மீண்டும் போட்டியிடுகிறார். மூன்றாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தலைமை அவருக்கு அளித்திருக்கிறது.
ஆ.ராசாவை எதிர்த்து அதிமுக சார்பில் லோகேஷ்,பாஜகவில், எல்.முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருந்தாலும் இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆ.ராசா 547832 வாக்குகள் பெற்று வெற்றி கண்டார். அவருக்கு அடுத்ததாக அதிமுக வேட்பாளர் 342007 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். 205825 வாக்குகள் கூடுதலாக பெற்றார் ஆ.ராசா.
அதே போல் ஆ.ராசா 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்னனிடம் தோற்று போனார்.
இம்முறை நீலகிரி தொகுதியில் திமுக, அதிமுக மட்டுமில்லாமல் பாஜக போட்டியிடுகிறது. பா.ஜ.க. வேட்பாளராக மத்திய இணை அமைச்சர்மெல்முருகன் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார். பாஜக வுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளில் அமமுக வுக்கு வேண்டுமானால் அந்த தொகுதியில் சிறிய அளவு வாக்கு வங்கி உள்ளது. அக்கூட்டணியில் உள்ள மற்றவைகளுக்கு சொல்லும்படியாக இல்லை. அதை வேட்பாளர் எல்.முருகன் உணர்ந்தவராகவே உள்ளாதால், பழங்குடியின வாக்காளர்களை குறிவைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஏன்னா அவருக்கு வேறு வழியில்லை.
ஆனால் திமுகவும், அதிமுகவும் தங்கள் வாக்கு வங்கியை அங்கு குறையாமல் வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க பாஜகவுக்கு எங்கிருந்து வாக்குகள் கிடைக்கும் என்பது புதிர் தான்.
திமுக வேட்பாளர் ஆ.ராசாவைப் பொருத்தவரை நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக களப்பணியாற்றுவதால், அவருக்கு அனைத்து நெளிவு சுளிவுகளும் நன்றாக தெரிந்திருக்கிறது. அது அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஆளுங்கட்சியான திமுகவுக்கு தொகுதியில் பல இடங்களில் எதிர்பு உள்ளதை மறுக்க முடியாது. அதே போல் பாஜகவும் மத்தியில் ஆட்சியாளர்களாக இருப்பதால், அவர்கள் மீதும் அதிருப்தி நிலவுகிறது. அதுமட்டுமின்றி மதசார்புடைய கட்சி அது என்று நீலகிரி வாக்காளர்களர்களின் மனதில் நன்கு பதிவாகிகிடக்கிறது. ஆகவே பாஜக வேட்பாளருக்கு எதிராக மக்கள் மனநிலை உள்ளது.
இந்த சூழலை அதிமுக வெற்றிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில் அவர்களின் உழைப்பு மேலும் தேவைப்படுகிறது. அங்கு வேட்பாளர் லோகேஷிக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவரது பிரச்சாரத்துக்கு பின்னர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரத்தில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவினர் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள்.
ஆகவே, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை மலருக்கு எந்த ஆசையும் வேண்டாம்...?
இந்த நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்.
பவானிசாகர் அ.தி.மு.க.
உதகமண்டலம் காங்கிரஸ்
கூடலூர் (தனி) அ.தி.மு.க.
குன்னூர் திமுக
மேட்டுப்பாளையம் அதிமுக
அவினாசி (தனி) அதிமுக
இதில் நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் திமுக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது.