வரிசை கட்டிய வாணியம்பாடி வாக்காளர்கள்! வாக்கு சதவீதத்தை மாற்றி மாற்றி கூறும் ஆணையம்!

அ.பிலால்,
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பிற்பகலுக்கு பின்னர் வரிசை கட்டி வாக்களித்தனர்.
மேற்படி இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் காலை முதல் மிகவும் மந்தமான நிலையில் வாக்குப்பதிவு இருந்தது.
வாக்களிக்க எவரும் முன்வரவில்லை. வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை முடித்துவிட்டு அதன் பின்னரே வாக்காளர்கள் குடும்பம் குடும்பமாக வாக்குச்சாவடிக்கு வந்தனர்.
இந்நிலையில் வாணியம்பாடியில் 75.5 சதவீதமும் ஆம்பூரில் 75.26 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதத்தைநேற்று இரவு 9 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரத சாகு அவர்கள் அதை நள்ளிரவில் மாற்றி அறிவித்தார்.
அதில் சென்னையில் உள்ள தென் சென்னை வடசென்னை மற்றும் மத்திய சென்னை உட்படபல்வேறு தொகுதிகளின் வாக்கு சதவீதத்தை குறைத்து அறிவித்திருக்கிறார்.
அதேபோல் கொங்கு மண்டலம் பகுதிகளில் வாக்கு சதவீதத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறார்.