டில்லி திருநங்கை எம்.பி வேட்பாளருக்குபோலீஸ் பாதுகாப்பு... டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு..

டில்லி திருநங்கை எம்.பி வேட்பாளருக்குபோலீஸ் பாதுகாப்பு...  டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு..

Naresh.N.

தெற்கு டில்லி மக்களவைத் தொகுதியில்  வேட்பு மனுத் தாக்கல் செய்ய, திருநங்கை வேட்பாளருக்கு போதிய பாதுகாப்பை வழங்க டில்லி போலீஸாருக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஷ்டீரிய பகுஜன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக திருநங்கை ராஜன்  சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 முன்னதாக, பதர்பூரில் உள்ள இவரது  அலுவலகத்தில் வைத்து, கடந்த மாதம் அடையாளம் தெரியாத சிலர் உள்ளே புகுந்து, தனது உயிருக்கு மிரட்டல் விடுத்து தாக்கப்பட்டதாகவும், எனவே போதுமான பாதுகாப்பு செய்து தர டில்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி அனுப் குமார் மெந்திரத்தா முன் விசாரணைக்கு வந்தது.

 அப்போது, தேர்தலில் பங்கேற்க அனைவருக்கும் சம உரிமையை அரசமைப்புச்சாசனம் வழங்கி உள்ளது.

 இதில் பாலின வேறுபாடுகள் இல்லை. எனவே, மனுதாரருக்கு போதிய பாதுகாப்பை மனு தாக்கலின்போது வழங்க தெற்கு டில்லி காவல் துணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.