பணி நேரத்தில்பீர் அடித்து விட்டு ஜாலியாக தூங்கிய ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்டு!

பணி நேரத்தில்பீர் அடித்து விட்டு ஜாலியாக தூங்கிய ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்டு!

உ.சசிகுமார்.

வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாத ரேஷன் கடை ஊழியர் பணி நேரத்திலேயே பீர் அருந்திவிட்டு அரிசி மூட்டைகளுக்கு இடையே  ஜாலியாக உறங்கினார். 

திருச்சிக்கு அருகே உள்ள புத்தூர் ரேஷன் கடையில் பணியாற்றி வந்தவர் நஸ்ருதீன். 

இந்த கடைக்கு பொருட்களை வாங்க ஒரு பெண்மணி வந்தார். அப்பொழுது அங்கு ரேஷன் கடை பணியாளர் இல்லை. ஆகவே தேடி பார்த்த போது அவர் அரிசி மூட்டைகளுக்கு இடையே கால் நீட்டி ஜாலியாக உறங்கிக் கொண்டிருந்தார். .

அவரை அங்கு வந்தவர்கள் எழுப்பி பார்த்தனர். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போதுதான் தெரிந்தது அவர் குடித்துவிட்டு இருந்தார் என்று. 

அதுவே அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, இந்த காட்சிகளை படம் பிடித்து சிந்தாமணியின் துணைபதிவாளர் இராஜ குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சிந்தாமணி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து நஸ்ருதீனை சிரமப்பட்டு எழுப்பியதுடன் அவரது மனைவியை வர வைத்து அவருடன் அவரை அனுப்பி வைத்தனர். 

அப்போது அவரால்  நடக்க கூட முடியவில்லை தள்ளாடிக்கொண்டே வீட்டுக்கு சென்றார். 

இதுகுறித்து விசாரணை நடத்திய துணைப் பதிவாளர் இராஜகுமார் போதை ஊழியர் நஸ்ருதீனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

மேலும் அந்த ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது அங்கு  ஏகப்பட்ட காலி பீர் பாட்டில்கள் இருந்தது.